பதிவு செய்த நாள்
02 செப்2014
00:36
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் யூரியா இறக்குமதி, 54 சதவீதம் சரிவடைந்து, 20.31 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 31.27 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது என, மத்திய உர அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவமழை பொழிவு சராசரிக்கும் குறைவாக இருந்ததால், கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பயிரிடும் பரப்பளவு குறைந்து உள்ளது. இதன் காரணமாகவே, யூரியா இறக்குமதி, 50 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது என, உர அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் யூரியா தேவை, ஆண்டுக்கு, 3 கோடி டன்னாக உள்ளது. இதில், உள்நாட்டில், 2.20 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.எஞ்சியுள்ள தேவை, இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.உள்நாட்டில், யூரியா இறக்குமதியில், இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி., மற்றும் எஸ்.டி.சி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.கையிருப்பு அதிகமாக இருந்ததால், சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், இந்தியாவின் யூரியா இறக்குமதி, 12 சதவீதம் சரிவடைந்து, 70.80 லட்சம் டன்னாக குறைந்தது. இது, முந்தைய 2012 – 13ம் நிதியாண்டில், 80.40 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|