பதிவு செய்த நாள்
02 செப்2014
00:38
மும்பை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால், நேற்று, பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.86 சதவீதம் மற்றும் 0.92 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டன.
நேற்றைய வியாபாரத்தில், உலோகம், பொறியியல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள் துறை குறியீட்டு எண் மட்டும், 0.67 சதவீதம் சரிவவை கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 229.44 புள்ளிகள் அதிகரித்து, 26,867.55 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, டாட்டாபவர் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஐ.டி.சி., சன்பார்மா உள்ளிட்ட, எட்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 73.35 புள்ளிகள் உயர்ந்து, 8,027.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|