வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2014
13:50
மும்பை : பங்குசந்தைகளில் சென்செக்ஸ் முதன்முறையாக 27 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் ஏற்றத்துடனும், புதிய உச்சத்துடனும் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(செப்., 2ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 81.53 புள்ளிகள் உயர்ந்து 26,949.08-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.95 புள்ளிகள் உயர்ந்து 8,048.65-ஆகவும் இருந்தன.
மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் புதிய உச்சமாக 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 27,049.08 புள்ளிகளில் வர்த்தகமாகின. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் 151.84 புள்ளிகள் உயர்ந்து 27,082.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 55.35 புள்ளிகள் உயர்ந்து 8,083.05-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் அநேக நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக பார்தி ஏர்டெல், சன்பார்மா, எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி., ஐடிசி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 02,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 02,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 02,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 02,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 02,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!