பதிவு செய்த நாள்
03 செப்2014
00:03
மும்பை:சென்ற 2013–14ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), இந்திய குடும்பங்களின் சேமிப்பு, 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
பணவீக்கம் காரணமாக, இந்திய குடும்பங்களின் சேமிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டு வருகிறது. மதிப்பீட்டு நிதியாண்டில், குடும்பங்கள் டிபாசிட்டுகளில் மேற்கொண்ட சேமிப்பு, 17 சதவீதம் அதிகரித்து, 5.91 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 6.91 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.மொத்த சேமிப்பில், டிபாசிட்டுகளின் பங்களிப்பு, 59 சதவீதமாக உள்ளது.
இதில், வங்கி டிபாசிட்டுகளின் பங்கு, 53 சதவீதமாகும்.அதேசமயம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மேற்கொண்ட சேமிப்பு, 22 சதவீதம் சரிவடைந்து, 43 ஆயிரம் கோடியிலிருந்து, 33,700 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.தனிநபர்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மேற்கொண்ட சேமிப்பு, 40 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 35 ஆயிரம் கோடியிலிருந்து, 21 ஆயிரம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|