பதிவு செய்த நாள்
03 செப்2014
00:09
மும்பை:சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்றும் சிறப்பாக இருந்தது.
பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்துள்ளது மற்றும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது போன்றவை பங்கு சந்தையை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைந்தன. இதைத்தொடர்ந்து, அன்னிய முதலீட்டு வரத்தும் சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, ‘சென்செக்ஸ்’ முதன்முறையாக 27 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.தற்காலிக மதிப்பீட்டின்படி, நேற்றைய தினத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 673 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
அதேசமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 168 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.நேற்றை வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், முதலீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.அதேசமயம், உலோகம், மின்சாரம், பொறியியல் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 151.84 புள்ளிகள் அதிகரித்து, 27,019.39 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், சிப்லா, பார்தி ஏர்டெல், கெயில் உள்ளிட்ட 17 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட், டாட்டா பவர், விப்ரோ உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 55.35 புள்ளிகள் உயர்ந்து, 8,083.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|