பதிவு செய்த நாள்
04 செப்2014
03:04
புதுடில்லி: சென்ற ஜூலை மாதத்தில், நிகர அளவில், 3.7 லட்சம் கிராமப்புற வாடிக்கை யாளர்கள், புதிதாக ஜி.எஸ்.எம். மொபைல்போன் சேவையில் இணைந்து உள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமப்புற மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 30.31 கோடியாக அதிகரித்துள்ளது என, இந்திய செல்லுலார் ஆபரேட்டர் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
கிராமப்புற வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்ததில், யுனிநார் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், மதிப்பீட்டு மாதத்தில், 3 லட்சம் சந்தாதாரர்களை இணைத்து கொண்டதையடுத்து, ஒட்டுமொத்த கிராமப்புற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.26 கோடியாக அதிகரித்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், 2.90 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்கள் வோடபோன் நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதையடுத்து, இப்பிரிவில், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 9.06 கோடியாக குறைந்துள்ளது.மேலும், ஏர்டெல் 90 ஆயிரம் பேரையும் (9.67 கோடி), ஏர்செல் 2.5 லட்சம் பேரையும் (2.62 கோடி), ஐடியா செல்லுலார், 20 ஆயிரம் பேரையும் (7.68 கோடி) புதிதாக இணைத்து கொண்டு உள்ளன.சென்ற ஜூலை நிலவரப்படி, நாடு தழுவிய அளவில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 74.44 கோடியாக உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|