பதிவு செய்த நாள்
07 செப்2014
01:36
மும்பை, :நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஆகஸ்ட் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 360 கோடி ரூபாய் (6 கோடி டாலர்) அதிகரித்து, 19.12 லட்சம் கோடி ரூபாயாக (31,864 கோடி டாலர்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 81 கோடி டாலர் சரிவடைந்து, 31,858 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 7 கோடி டாலர் உயர்ந்து, 29,139 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,117 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 438 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 40 லட்சம் டாலர் குறைந்து, 168 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளன என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|