அன்னிய செலாவணி கையிருப்புரூ.19.12 லட்சம் கோடியாக உயர்வுஅன்னிய செலாவணி கையிருப்புரூ.19.12 லட்சம் கோடியாக உயர்வு ... முட்டை விலை 315 காசாக உயர்வு முட்டை விலை 315 காசாக உயர்வு ...
புண்ணாக்கு ஏற்றுமதி 58 சதவீதம் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2014
01:38

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 58 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.33 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 3.17 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.சோயா புண்ணாக்குநடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), ஒட்டு மொத்த புண்ணாக்கு ஏற்றுமதி, 36 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 13.55 லட்சம் டன்னில்இருந்து, 8.65 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், உள்நாட்டு சந்தையில் இதன் விலை அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையிலும் சோயா புண்ணாக்கின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது. கணக்கீட்டு ஐந்து மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 7 லட்சம் டன்னிலிருந்து, 1.1 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது.தென்கொரியாஅதேசமயம், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 3.58 லட்சம் டன்னிலிருந்து, 5.14 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தென்கொரியாவின் இந்திய புண்ணாக்கு இறக்குமதி, 4,16,043 டன்னில்இருந்து, 4,16,918 டன்னாக சற்றே உயர்ந்துள்ளது. இதே போன்று வியட்நாமின் புண்ணாக்கு இறக்குமதியும், 63,266 டன்னிலிருந்து, 65,630 டன்னாக அதிகரித்துள்ளது.ஆனால், ஈரானின் புண்ணாக்கு இறக்குமதி, 75 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.72 லட்சம் டன்னில்இருந்து, 1.27 லட்சம் டன்னாக சரிவு அடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)