பதிவு செய்த நாள்
07 செப்2014
01:38
புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 58 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.33 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 3.17 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.சோயா புண்ணாக்குநடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), ஒட்டு மொத்த புண்ணாக்கு ஏற்றுமதி, 36 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 13.55 லட்சம் டன்னில்இருந்து, 8.65 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், உள்நாட்டு சந்தையில் இதன் விலை அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையிலும் சோயா புண்ணாக்கின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது. கணக்கீட்டு ஐந்து மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 7 லட்சம் டன்னிலிருந்து, 1.1 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது.தென்கொரியாஅதேசமயம், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 3.58 லட்சம் டன்னிலிருந்து, 5.14 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தென்கொரியாவின் இந்திய புண்ணாக்கு இறக்குமதி, 4,16,043 டன்னில்இருந்து, 4,16,918 டன்னாக சற்றே உயர்ந்துள்ளது. இதே போன்று வியட்நாமின் புண்ணாக்கு இறக்குமதியும், 63,266 டன்னிலிருந்து, 65,630 டன்னாக அதிகரித்துள்ளது.ஆனால், ஈரானின் புண்ணாக்கு இறக்குமதி, 75 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.72 லட்சம் டன்னில்இருந்து, 1.27 லட்சம் டன்னாக சரிவு அடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|