முட்டை விலை 315 காசாக உயர்வுமுட்டை விலை 315 காசாக உயர்வு ... பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில் 15 ஆயிரம் வங்கி கணக்கு திறப்பு பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில் 15 ஆயிரம் வங்கி கணக்கு திறப்பு ...
வேளாண் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ஏற்பு : புதிய முறையில் எல்லா பயிருக்கும் இழப்பீடு கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2014
01:40

நாமக்கல்: வேளாண் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகளால், நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, மத்திய அரசு, தனிநபர் காப்பீட்டு திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதனால், எந்த பயிரை, எந்த பகுதியில் பயிரிட்டாலும், காப்பீடு பெறப்பட்டு, அதற்கான இழப்பீடு தொகை கிடைக்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய அளவில், மாறுபட்ட சீதோஷ்ண நிலை, வானிலை மாற்றம், இயற்கை சீற்றம், வேளாண் பொருளை சந்தைப்படுத்துவதில் நிச்சயமற்ற நிலை, போதிய நிதி வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால், வேளாண் தொழிலில் ஈடுபட்டோர், பல்வேறு சவால் மற்றும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
தேசிய வேளாண் காப்பீடு:இதுபோன்ற பிரச்னைகளால், சிறு மற்றும் குறு விவசாயி, மானாவாரி சாகுபடி விவசாயிகள் ஆகியோர், ஒவ்வொரு ஆண்டும், பெரும் இன்னல்களை சந்தித்து, தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம், தென்னை காப்பீடு திட்டம் உள்ளிட்ட பயிர்காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவ்வாறு, விவசாயியால் காப்பீட்டு தொகை செலுத்திய பின், அவற்றை பெறுவதிலும், மதிப்பீடு செய்வதிலும், பல்வேறு பிரச்னைகளை, விவசாயிகள் சந்திக்கின்றனர்.நிர்ணயம்:குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும், வேளாண் பொருட்களை அடிப்படையாக கொண்டு, பிர்கா வாரியாக, காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், விவசாயிகள், தன்னிச்சையாக எந்த பயிரையும், தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டு, காப்பீடு செய்ய முடியாது.
‘சேட்டிலைட்’ மூலம் மத்திய, மாநில அரசால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட விவசாயி, காப்பீட்டு திட்டத்தில் நுழைய முடியும். மற்றபடி, வேறு பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, காப்பீடு வசதி கிடைக்காது.
எந்த பயிரை பயிரிட்டாலும், காப்பீடு செய்து தர வேண்டும். அதற்கான இழப்பீடு தொகையும், முழுமையாக வழங்க வேண்டும் எனக்கூறி, பல ஆண்டுகளாக, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக அரசு, 2013 – -14ம் நிதியாண்டில், விருதுநகர் மற்றும் வேலுார் மாவட்டத்தில், முன்னோடி திட்டமாக, தனிநபர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
இருப்பினும், காப்பீடு என்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், அறிவிக்கப்பட்ட திட்டம் செயல்படுத்த முடியாமல், கிடப்பில் இருந்தது. இந்நிலையில், தற்போதைய மத்திய அரசு, தனிநபர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு, அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து, தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட, சில மாவட்டங்களில், பரிச்சார்த்த முறையில் செயல்படுத்த, வேளாண் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, சில குறிப்பிட்ட வேளாண் வட்டார விவசாயிகளிடம், தனிநபர் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்டப்பயன்களை சொல்லி, காப்பீட்டில் சேர அழைப்பு விடுத்து உள்ளனர்.
தனிநபர் காப்பீடு:இதுகுறித்து, வேளாண் காப்பீட்டு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், விவசாயிகள் பயிரிட்ட குறிப்பிட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பகுதி வேளாண் பொருட்களுக்கு மட்டுமே, காப்பீடு வசதி செய்யப்பட்டது.தற்போது, மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், பரிச்சார்த்த முறை, ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா ஒரு பிர்கா வீதம், தனிநபர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை, அரசிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும். இதனால், எந்த பயிரும் பயிரிட்டு இழப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)