பதிவு செய்த நாள்
09 செப்2014
02:50
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சூடுபிடித்து காணப்பட்டது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற நிலைப்பாட்டால், அன்னிய நிதி நிறுவனங்கள், முன்னணி நிறுவனப் பங்குகளை போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 1.08 சதவீதம் அதிகரித்தன.
நுகர்வோர் சாதனங்கள்:நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள் தவிர்த்து, இதர அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து உள்ளதையடுத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 1.79 சதவீதம் அதிகரித்தது.இதையடுத்து, நுகர் பொருட்கள் (1.40 சதவீதம்), பொறியியல் (1.29 சதவீதம்), உலோகம் (1.25 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.
அதேசமயம், நுகர்வோர் சாதன துறை குறியீட்டு எண், 0.22 சதவீதம் சரிவை கண்டது.சென்ற ஆகஸ்ட்டில், சீனாவின் ஏற்றுமதி, நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும், சிறப்பாக அதிகரித்துள்ளதால், இதர ஆசியப்பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்படன் காணப்பட்டது.அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.விப்ரோ:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 293.15 புள்ளிகள் அதிகரித்து, 27,319.85 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., விப்ரோ உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், என்.டி.பி.சி., மகிந்திரா உள்ளிட்ட, 4 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 87.05 புள்ளிகள் உயர்ந்து, 8,173.90 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|