பதிவு செய்த நாள்
10 செப்2014
00:18
கூடலுார் :கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் விளையும் குறுமிளகு விலை, கிலோ, 700 ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதிகளில் அதிகளவில் குறுமிளகு விளைவிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு கிலோ, 420 ரூபாயாக இருந்த குறுமிளகின் விலை, நடப்பாண்டில், 700 ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது, நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், கூடலுாரில் நடப்பாண்டில் குறுமிளகு விளைச்சலும் அதிகரித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கூடலுார் பகுதியை சேர்ந்த குறுமிளகு வியாபாரி பாட்டசேரி பாபு கூறுகையில், கடந்த ஆண்டு குறுமிளகு உற்பத்தி குறைவு காரணமாக, இந்த ஆண்டு விலை சிகரத்தை தொட்டுள்ளது.இந்த ஆண்டு மே மாதம் பெய்த மழையின் காரணமாக கூடலுாரில் மட்டுமின்றி, ஏற்காடு, கேரள மாநிலத்தின் இடுக்கி, வயநாடு, கர்நாடக மாநிலத்தின் கொடுகு பகுதிகளிலும் குறுமிளகு விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் அடுத்த ஆண்டில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|