பதிவு செய்த நாள்
10 செப்2014
00:22
மும்பை :தனியார் துறை வங்கிகளின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை, ரிசர்வ் வங்கி, 70ஆக நிர்ணயித்துள்ளது.
புதிய கம்பெனிகள் சட்டப்படி, தனியார் துறை வங்கிகளில், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (எம்.டி., அண்டு சி.இ.ஓ.,), இதர முழுநேர இயக்குனர்களுக்கான, அதிகபட்ச வயது வரம்பை, 70ஆக நிர்ணயித்துள்ளது.இதன்படி, 70 வயதை தாண்டியவர்கள் எவரும், தனியார் துறை வங்கிகளில் மேற்கண்ட பொறுப்புகளில் தொடர முடியது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கம்பெனிகள் சட்டம்–2013ன் படி [பிரிவு 196(3)], 21 வயதுக்குட்பட்டோரும்; 70 வயதை எட்டியோரும், எந்த ஒரு நிறுவனத்திலும், நிர்வாக இயக்குனர், முழு நேர இயக்குனர் அல்லது மேலாளர் பொறுப்பில் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|