பதிவு செய்த நாள்
10 செப்2014
00:35
மும்பை: புதிய உச்சத்தை எட்டியிருந்த பங்குச் சந்தைகள், நேற்று, திடீர் சரிவை கண்டது.
சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி, தலா, 0.20 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தன.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், நுகர்பொருட்கள், மருந்து ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 54.53 புள்ளிகள் சரிவடைந்து, 27,265.32 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், இன்போசிஸ் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சிப்லா, கோல் இந்தியா, ஐ.டி.சி., உள்ளிட்ட,14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 20.95 புள்ளிகள் குறைந்து, 8,152.95 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|