ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.60.95ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.60.95 ... தங்கம் விலை ரூ.56 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.56 அதிகரிப்பு ...
டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
11:00

புதுடில்லி : சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், அடுத்த வாரம், டீசல் விலையை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், மத்திய அரசு குறைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்:
பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.அதேபோல், டீசலுக்கான மானியத்தையும் குறைத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ற வகையில், அதன் விலையையும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கும் சூழ்நிலையை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.அதனால், டீசலின் உள்நாட்டு விற்பனை விலைக்கும், சர்வதேச விலைக்கும் உள்ள வேறுபாட்டை நீக்க, ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் அளவுக்கு டீசல் விலையை உயர்த்தும் முடிவை, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு எடுத்தது. அதன்படி, கடந்த சில மாதங்களாக, டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டது.இந்த விலை உயர்வால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கும், உள்நாட்டு விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு, முற்றிலும் குறைந்தது. சமீப நாட்களாக, டீசல் விற்பனையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பை சந்திப்பது தவிர்க்கப்பட்டது.
எதிர்பார்ப்பு:
எனவே, பெட்ரோலைப் போல, டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும், மத்திய அரசு, விரைவில் கைவிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது, அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. இந்த ஆண்டு இறுதியில், சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குப் பின், இது தொடர்பான முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை, தற்போது, 100 டாலருக்கு (6,000 ரூபாய்) கீழ் குறைந்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாலும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பு குறைந்து, உபரி வருவாய் பெறும் சூழ்நிலை உள்ளதால், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், டீசல் விலை விரைவில் குறைக்கப்படலாம் என, நம்பப்படுகிறது.அனேகமாக, அடுத்த வாரம் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம். இது தொடர்பான பரிசீலனையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக, அந்த அமைச்சகத்தின் உயரதிகாரிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)