பதிவு செய்த நாள்
10 செப்2014
17:28
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று பெரிதும் சரிந்தன. சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 58 புள்ளிகளும் சரிந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு நாட்களாக கடும் சரிவை சந்தித்தது, முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் முக்கிய நிறுவன பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 207.91 புள்ளிகள் சரிந்து 27,057.41-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 58.85 புள்ளிகள் சரிந்து 8,094.10-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் சரிந்தும், 8 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ மோட்டோ கார்ப், இன்போசிஸ், ஐடிசி., கோல் இந்தியா, எச்டிஎப்சி., பெல், எல்அண்ட்டி., மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ்., விப்ரோ உள்ளிட்ட அநேக பங்குகள் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|