பதிவு செய்த நாள்
11 செப்2014
00:05
புதுடில்லி:வெளிநாட்டு மாணவர்கள், குறைந்த செலவில் கல்வி பயில்வதற்கு ஏற்ற இடமாக, இந்தியா விளங்குகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியாவில் இதற்கான செலவு அதிகமாக உள்ளது என, எச்.எஸ்.பீ.சி., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 15 நாடுகளில், 4,500க்கும் மேற்பட்ட பெற்றோர் களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவு உள்ளிட்டவற்றிற்காக, சராசரியாக ஆண்டுக்கு, 5,642 டாலர் (3.39 லட்சம் ரூபாய்) செலவிடுகின்றனர்.அதேசமயம், ஆஸ்திரேலியாவில் இதற்கான செலவு மிகவும் அதிகபட்சமாக, 42,093 டாலராக (25.26 லட்சம் ரூபாய்) உள்ளது.இதையடுத்து, சிங்கப்பூர் (39,229 டாலர்/23.54 லட்சம் ரூபாய்), அமெரிக்கா (36,564 டாலர்/21.94 லட்சம் ரூபாய்) ஆகிய நாடுகள் உள்ளன.
இங்கிலாந்தில், வெளிநாட்டு மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்கான செலவு, 35,045 டாலராக உள்ளது. இது, பிரேசிலில், 12,627 டாலராகவும், சீனாவில், 10,729 டாலராகவும், மெக்சிக்கோவில், 9,460 டாலராகவும் உள்ளன.துருக்கி, சீனா மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட 15 நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் கல்வி கற்பதற்கான செலவு மிகவும் குறைவாகும்.இதற்கு, அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களுக்கான பெரும்பான்மை நிதி உதவி அரசிடமிருந்தே கிடைக்கப் பெறுவதாகும்.
மேலும், வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைச் செலவு, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிக குறைவாகும்.அதேசமயம், கல்வி தரத்தில், மேற்கண்ட 15 நாடுகளின் பட்டியலில், இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எச்.எஸ்.பீ.சி., மேற்கொண்ட ஆய்வில், 5 சதவீத மாணவர்கள் கல்வி கற்க விரும்பும் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|