பதிவு செய்த நாள்
12 செப்2014
02:08
புதுடில்லி: தொடர்ந்து ஏழாவது மாதமாக, சென்ற ஆகஸ்ட்டிலும், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி பங்குகளில் முதலீட்டை அதிகரித்து கொண்டுள்ளன.இதன்படி, சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, வங்கி பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, 56,625 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, இந்நிறுவனங்கள் நிர்வகித்து வரும் மொத்த சொத்து மதிப்பில் (2.81 லட்சம் கோடி ரூபாய்), 20.10 சதவீதமாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.சென்ற ஜனவரியில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 30,339 கோடியை வங்கி பங்குகளில் முதலீடு செய்து இருந்த நிலையில், ஆகஸ்டில், இது, 56,625 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களின் அடுத்த தேர்வாக, மென்பொருள் துறை உள்ளது. இத்துறை நிறுவனப் பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, 29,668 கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, மருந்து (19,394 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (17,754 கோடி), நிதி (15,116 கோடி) ஆகிய துறைகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|