பதிவு செய்த நாள்
16 செப்2014
23:25
மும்பை:அமெரிக்க மத்திய வங்கி நிதி ஆய்வு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற நிலைப்பாடு எழுந்துள்ளது.இதன் காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி, தலா, 1.20 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டன. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், பொதுத் துறை மற்றும் அடிப்படை கட்டுமானம் ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண் முறையே, 3.42 சதவீதம், 3.26 சதவீதம், 3.12 சதவீதம் மற்றும் 3.05 சதவீதம் சரிவை கண்டன.ஐரோப்பிய சந்தைகளில், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதர ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், கடந்த 10 வாரங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 324.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,492.51 புள்ளிகளில் நிலைபெற்றது. ‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டாபவர், ஆக்சிஸ் பேங்க், எல் அண்டு டி உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாக்டர் ரெட்டீஸ், இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 109.10 புள்ளிகள் சரிவடைந்து, 7,932.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|