பதிவு செய்த நாள்
16 செப்2014
23:39
புதுடில்லி:அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,), 21 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.நிதி செயலர் அரவிந்த் மயாராம் தலைமையிலான எப்.ஐ.பி.பீ., 35 முதலீட்டு திட்டங்களுக்கான மனுவை ஆய்வு செய்தது. இதில், கப்பல் கட்டுமான துறையைச் சேர்ந்த பார்தி சிப்யார்டு, வெரிஸன் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா, இந்தஸ்இந்த் பேங்க், பாதுகாப்பு துறையைச் சேர்ந்த கினிகோ காமன் காம்போசைட்ஸ் மற்றும் நிதி சேவை துறையைச் சேர்ந்த ஏ.என்.இசட். கேப்பிட்டல் உள்ளிட்ட, 21 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளித்தது.அதேசமயம், தொலைத் தொடர்பு துறையைச் சேர்ந்த, சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் திட்டத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|