பொழுதுபோக்கு துறை சந்தை மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடியை எட்டும்பொழுதுபோக்கு துறை சந்தை மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடியை எட்டும் ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.112 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.112 குறைவு ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதி 22 சதவீதம் வளர்ச்சி : திருப்பூர் பின்னலாடை தொழில் துறை மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2014
00:01

திருப்பூர் :நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்படைந்துள்ளது.வளர்ச்சி பாதைகடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த ஆயத்த ஆடை உற்பத்தி துறை, தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.இதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42,492 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 34,939 கோடி ரூபாயாக இருந்தது.
இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘அனைத்து வகையிலும் ஜவுளி துறைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஆடை உற்பத்திக்கு ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளதால், நடப்பு நிதியாண்டில் திருப்பூரின் ஆடைகள் ஏற்றுமதி, 21 ஆயிரம் கோடி ரூபாயை எட்டிவிடும்,’’ என்று தெரிவித்தார்.
கோவை ‘டெக்ஸ்பிரனர்ஸ்’ அமைப்பு செயலர் பிரபு தாமோதரன் கூறும்போது:இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, குறைவான விலையில் நுாலிழை கிடைக்கிறது. இதனால், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.அதிக விலைஅதேசமயம் நுாற்பாலைகள், மூலப்பொருளான பருத்தியை, பிற நாடுகளை காட்டிலும் அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
இதனால், நான்கு மாதங்களாக நுாற்பாலைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு, இந்திய பருத்தி கழகம் மூலம், பருத்தி விலையை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மூலப்பொருள் இருப்பு வைக்க தேவையான நிதியுதவி வழங்கினால் மட்டுமே, நுாற்பாலைகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)