பதிவு செய்த நாள்
19 செப்2014
04:00

நாமக்கல்: தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 340 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, முட்டை கொள்முதல் விலை, 330 காசுகளில் இருந்து, 340 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 365, பெங்களூரு, 360, மைசூர், 355, ஐதராபாத், 335, மும்பை, 375, விஜயவாடா, 336, கோல்கட்டா, 370, பர்வாலா, 336, டில்லி, 345.இவ்வாறு, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 58 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில், நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழிவிலை, 76 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|