பதிவு செய்த நாள்
19 செப்2014
11:43
மும்பை : இந்தியா வந்துள்ள சீன அதிபருடன் நேற்று போடப்பட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்களின் காரணமாக இந்திய முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று (செப்டம்பர் 19) உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 73.39 புள்ளிகள் உயர்ந்து 27,185.60 புள்ளிகளாகவும், நிப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 8136.60 புள்ளிகளாகவும் உள்ளன.
மின்துறை, கட்டுமானத்துறை, ஆயுள் காப்பீட்டுத்துறை, உலோகத்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் மதிப்பு உயர்ந்திருப்பதன் காரணமாக பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளின் உயர்வும் இந்திய பங்குச் சந்தைகளின் உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|