பதிவு செய்த நாள்
20 செப்2014
00:01
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், நிறுவனங்கள் இடையேயான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 1.96 லட்சம் கோடி ரூபாயாக (3,260 கோடி டாலர்), அதிகரித்துள்ளது என, கிரான்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், 762 ஒப்பந்தங்கள் மூலம், 3,260 கோடி டாலர் மதிப்பிற்கு, இணைத்தல், கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது, கடந்தாண்டில் முறையே, 614 ஒப்பந்தங்கள் மற்றும் 2,770 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.கணக்கீட்டு காலத்தில், உள்கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு துறை நிறுவனங்களிடையே இணைத்தல், கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
குறிப்பாக, எரிசக்தி மற்றும் இயற்கை வள துறையில், 25 ஒப்பந்தங்கள் வயிலாக, இதுவரை யில், 410 கோடி டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இருப்பினும், தகவல் மற்றும் அதுசார்ந்த பணிகள் துறையில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளே பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|