பதிவு செய்த நாள்
20 செப்2014
00:17
கோவை:சீனாவில் தேவை குறைந்துள்ளதால், வரும் 2014 – 15ம் பருவத்தில் (அக்.–செப்.,), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 60 – 70 லட்சம் பொதிகளாக சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு 2013 – 14ம் பருவத்தில் (அக்.,–செப்.,), பருத்தி ஏற்றுமதி, 1.10 கோடி பொதிகளை (ஒரு பொதி=170 கிலோ) எட்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது.சீனாவிற்கு பருத்தியை அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு பருவத்தில் மட்டும், சீனாவிற்கான பருத்தி ஏற்றுமதி, 99 லட்சம் பொதிகளை எட்டியுள்ளது.
இந்நிலையில், கையிருப்பு அதிகரித்துள்ளதையடுத்து, பருத்தி கொள்முதலுக்கு புதிய கொள்கையை சீனா வகுத்துள்ளது. இதன் காரணமாக, வரும் பருவத்தில், பருத்தி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என, வட இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.குறைந்த விலை கருவி: பருத்தி எடுப்பதற்கான குறைந்த விலை கருவியை, தென்னிந்திய ஆலைகள் கூட்டமைப்பு (சைமா) வடிவமைத்துள்ளது.
இதுகுறித்து, ‘சைமா’ வின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:பருத்தி எடுப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், வணிக ரீதியில் அறிமுகப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சூரியமின் சக்தி மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய இப்புதிய கருவியின் மூலம், 1 மணி நேரத்தில், 10 கிலோ பருத்தி எடுக்க முடியும். அதேசமயம், இதே அளவு பருத்தியை கையினால் பறிக்க, எட்டு மணி நேரம் தேவைப்படும்.இப்புதிய கருவியின் விலை, 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|