பதிவு செய்த நாள்
20 செப்2014
00:19
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 55.40 லட்சம் அதிகரித்து, 74.99 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த ஜூலை நிலவரப்படி, 74.44 கோடியாக இருந்தது என, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.ஐடியா செல்லுலார்மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனங்களின் சந்தாதாரர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இக்கூட்டமைப்பில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் புதிதாக இணைந்துள்ளது. கணக்கீட்டு மாதத்தில், ஐடியா செல்லுலார் நிறுவனத்தில், அதிகபட்சமாக, 17.20 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 14.18 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 18.91 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதையடுத்து, வோடபோன் நிறுவனம், 12.20 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து கொண்டதையடுத்து, மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை, 17.24 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 23 சதவீதமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், 7.69 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டதையடுத்து, ஒட்டு மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை, 21.05 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம், 28.07 சதவீத சந்தை பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.ஏர்செல்:இவைதவிர, ஏர்செல் நிறுவனம், 9.05 லட்சம் வாடிக்கையாளர்களையும், யூனிநார் நிறுவனம், 7.06 லட்சம் வாடிக்கையாளர்களையும் புதிதாக சேர்த்து கொண்டுள்ளன.
இதையடுத்து, மேற்கண்ட இரு நிறுவனங்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை முறையே, 7.48 கோடி மற்றும் 4.08 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளன. சென்ற ஆகஸ்டில், வீடியோகான் நிறுவனத்தில், 1.96 லட்சம் சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளதையடுத்து, மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 58.34 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறுவனமும், 10,017 வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்து கொண்டதையடுத்து, மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை, 32.93 லட்சமாக உயர்ந்துள்ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|