பதிவு செய்த நாள்
26 செப்2014
01:48
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வீழ்ச்சி கண்டது.இம்மாதத்திற்கான பங்கு முன்பேர ஒப்பந்த காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.03 சதவீதம் மற்றும் 1.13 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 3.21 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, எண்ணெய் – எரிவாயு (–3.08 சதவீதம்), உலோகம் (–3 சதவீதம்) உள்ளிட்ட துறைகள் உள்ளன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு காணப்பட்டது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 276.33 புள்ளி கள் வீழ்ச்சி கண்டு, 26,468.36 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஆக்சிஸ் பேங்க், ஹிண்டால்கோ, பெல் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், டாக்டர் ரெட்டீஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 90.55 புள்ளிகள் சரிவடைந்து, 7,911.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|