பதிவு செய்த நாள்
26 செப்2014
10:22
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(செப்., 26ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின, ஆனால் சற்று நேரத்திலேயே ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 102.96 புள்ளிகள் சரிந்து 26,365.40-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 27 புள்ளிகள் சரிந்து 7,884.85-ஆகவும் இருந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் காரணமாக இந்திய பங்குசந்தைகளும் சரிவுடன் துவங்கின. ஆனால் சற்று நேரத்திலேயே ஹிண்டால்கோ, எச்டிஎப்சி., ஐடிசி போன்ற நிறுவன பங்குகள் உயர்வால் இந்திய பங்குசந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. இதனால் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 40.44 புள்ளிகள் உயர்ந்து 25,508.80-ஆகவும், நிப்டி 17.90 புள்ளிகள் உயர்ந்து 7,929.75-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|