பதிவு செய்த நாள்
26 செப்2014
16:58
மும்பை : கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் கடைசிநாளான இன்று(செப்., 26ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும், சர்வதேச தரகுறியீட்டு நிறுவனமா ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், இந்தியாவின் கடன் கொள்கையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்திருப்பதன் எதிரொலியாக பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 157.96 புள்ளிகள் உயர்ந்து 26,626.32-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 7,968.85-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ., ஆக்சிஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி நிறுவன பங்குகள் நன்கு ஏற்றம் கண்டு இருந்தன. இவைகள் தவிர்த்து சன்பார்மா, சிப்லா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|