பதிவு செய்த நாள்
26 செப்2014
23:30
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, மிகவும் நன்கு இருந்தது.சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, எஸ் அண்டு பி, இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, எதிர்மறை (நெகடிவ்) என்ற பிரிவிலிருந்து, நிலையானது என்ற பிரிவிற்கு மாற்றியது. இதன் காரணமாக, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’, தலா, 0.60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.நேற்றைய வியாபாரத்தில், உலோகத் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 2.49 சதவீதம் ஏற்றம் கண்டது.
இதையடுத்து, பொதுத் துறை (2.27 சதவீதம்), மருந்து (2.19 சதவீதம்), வங்கி (1.91 சதவீதம்), ஆகியவற்றின் குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன. அதேசமயம், நுகர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே வரவேற்பு குறைந்து காணப்பட்டது.நான்கு வார சரிவிற்கு பிறகு, ஐரோப்பிய சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 157.96 புள்ளிகள் அதிகரித்து, 26,626.32 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, சன்பார்மா, மகிந்திரா உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், கெயில், ஐ.டி.சி., உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 57 புள்ளிகள் அதிகரித்து, 7,968.85 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|