பதிவு செய்த நாள்
26 செப்2014
23:38
புதுடில்லி:சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ்), இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, எதிர்மறை (நெகட்டிவ்) பட்டியலிலிருந்து, நிலையானது (ஸ்டேபிள்) என்ற பிரிவிற்கு தரம் உயர்த்தியுள்ளது.மத்தியில் உறுதியாக அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, வளர்ச்சியை ஊக்கவிக்கும் வகையில், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிதி நிலை மேம்பட்டுள்ளதுடன், பணவீக்கமும் கட்டுக்குள் வந்துள்ளது. இது போன்ற காரணங்களால், கடன் தகுதி மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என, எஸ் அண்டு பி தெரிவித்துள்ளது.
அதிகளவில் அன்னிய முதலீட்டை கவர, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சமயத்தில், எஸ் அண்டு பி தரக்குறியீட்டை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் அண்டு பி, இந்தியாவின் ஆறு முன்னணி நிறுவனங்களுக்கான கடன் தகுதி மதிப்பீட்டையும், எதிர்மறை (நெகட்டிவ்) பிரிவிலிருந்து, நிலையானது (ஸ்டேபிள்) என்ற பிரிவிற்கு உயர்த்தியுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., என்.எச்.பி.சி மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்.,) ஆகிய ஆறு நிறுவனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததையடுத்து, இவற்றின் கடன் தகுதி மதிப்பீடு, நிலையானது என்ற தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இவை தவிர, அரசு சார்ந்த நிறுவனங்களான, இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி, இந்தியன் ரயில்வேஸ் பைனான்ஸ் கார்ப், எக்சிம் பேங்க், பவர் பைனான்ஸ் கார்ப் ஆகியவற்றின் கடன் தகுதி மதிப்பீட்டையும், எதிர்மறையிலிருந்து, நிலையானது என்ற பிரிவிற்கு எஸ் அண்டு பி மாற்றியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|