பதிவு செய்த நாள்
28 செப்2014
01:01
சேலம்:வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு உளுந்து, உளுந்தம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான உளுந்து, உளுந்தம் பருப்பு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. வாரத்துக்கு, 300 லாரி வரை, வந்துகொண்டிருந்த உளுந்து வரத்து, ஜூலை முதல் குறைந்தது. இதனால், குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை, விலை உயர்ந்தது.ஆனால், தற்போது, வடமாநிலங்களில் இருந்து வாரத்துக்கு, 150 லாரிகள் வரை வருகின்றன.
இந்நிலையில், பெரிய வியாபாரிகள், பிரபல பருப்பு தயாரிப்பு நிறுவனங்களும் மொத்தமாக வாங்கிய உளுந்து, உளுந்தம் பருப்பை, தற்போது விற்பனைக்கு அனுப்புகின்றன.இதன் காரணமாக, விலை குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.கடந்த வாரம், மொத்த விலையில், உளுந்தம் பருப்பு, முதல் ரகம், குவிண்டால், 10,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 9,800 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 9,300 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தற்போது, முதல் ரகம் குவிண்டால், 9,700 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 9,300 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 8,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில், கிலோவுக்கு, 4–5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது, மேலும் சரிய வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|