பதிவு செய்த நாள்
28 செப்2014
01:12
புதுடில்லி:இந்தியாவின் உருக்கு உற்பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 70 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.
மேலும், சர்வதேச அளவில், உருக்கு உற்பத்தி சராசரியாக, மதிப்பீட்டு மாதத்தில், 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு (டபிள்யூ.எஸ்.ஏ.,) தெரிவித்துள்ளது.பல முன்னணி இந்திய நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி, கணக்கீட்டு மாதத்தில், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதேசமயம், சீனாவில் இதன் உற்பத்தி குறைந்ததால், சர்வதேச சராசரி உருக்கு உற்பத்தி அளவு சுணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சீனாவின் உருக்கு உற்பத்தி, 6.90 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியுடன் (6.82 கோடி டன்) ஒப்பிடுகையில், 1 சதவீதம் மட்டுமே அதிகமாகும் என, டபிள்யூ.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், சர்வதேச அளவில், உருக்கு உற்பத்தி சராசரி அளவாக, 2.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதே காலத்தில், இந்தியாவில் இதன் சராசரி, 1.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், உலக நாடுகளின் உருக்கு உற்பத்தி, 109.60 கோடி டன்னாக உள்ளது. இதில், இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு முறையே, 5.60 கோடி டன் மற்றும் 55 கோடி டன் என்ற அளவில் உள்ளது.கணக்கீட்டு காலத்தில், சர்வதேச உருக்கு உற்பத்தியில், இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|