இந்­தி­யாவின் உருக்குஉற்­பத்தி 70 லட்சம் டன்இந்­தி­யாவின் உருக்குஉற்­பத்தி 70 லட்சம் டன் ... உயர்ந்­தது பாமாயில் குறைந்­தது சர்க்­கரை உயர்ந்­தது பாமாயில் குறைந்­தது சர்க்­கரை ...
நறு­மண பொருட்கள் ஏற்­று­மதி ரூ.4,339 கோடியை எட்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2014
01:15

கொச்சி:நடப்பு நிதி­யாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்., – ஜூலை), நாட்டின் நறு­மணப் பொருட்கள் ஏற்­று­மதி, 4,339 கோடி ரூபாயை (72.10 கோடி டாலர்) எட்­டி­யுள்­ளது. இதன்­படி, 2,71,280 டன் நறு­மணப் பொருட்கள் ஏற்­று­ம­தி­யாகி உள்­ளன என, இந்­திய நறு­மணப் பொருட்கள் வாரி­யத்தின் தலைவர் ஜெய­திலக் தெரி­வித்­துள்ளார்.இது, கடந்த 2013 – 14ம் நிதி­யாண்டில் முறையே, 3,892 கோடி ரூபாய் (68.28 கோடி டாலர்), மற்றும் 2,46,060 டன் என்ற அளவில் இருந்­தன.
தேவை அதிகரிப்பு:ஆக, கணக்­கீட்டு காலத்தில், நறு­மணப் பொருட்கள் ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டையில், 10 சத­வீ­தமும், ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 11 சத­வீ­தமும் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில், 6 சத­வீ­தமும் வளர்ச்சி கண்­டுள்­ளன.மதிப்­பீட்டு காலத்தில், ஒட்­டு­மொத்த நறு­மணப் பொருட்கள் ஏற்­று­ம­தியில், மிளகு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் உள்­ளிட்­ட­வற்றின் ஏற்­று­மதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்­ப­டையில் சிறப்­பான அளவில் உயர்ந்­துள்­ளது.சர்­வ­தேச சந்­தையில், இந்­திய நறு­மணப் பொருட்­க­ளுக்கு தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. ஏற்­று­மதி பங்­க­ளிப்பில், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்கள் முக்­கிய பங்­க­ளிப்பை கொண்­டு உள்­ளன.
இதன் கார­ண­மாக, நடப்பு நிதி­யாண்டில், நறு­மணப் பொருள் ஏற்­று­மதி, முன் எப்­போதும் இல்­லாத அளவில் உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.ஏற்­று­மதி வாயி­லான அன்­னியச் செலா­வணி வரு­வாயில், மிளகாய் மற்றும் புதினா ஆகி­ய­வற்றின் பங்­க­ளிப்பு தொடர்ந்து முத­லி­டத்தில் உள்­ளது.
மிளகு:நறு­மணப் பொருட்­களின் ராஜா என்று அழைக்­கப்­படும், மிள­கிற்­கான தேவை சிறப்­பான அளவில் உயர்ந்­த­தை­ய­டுத்து, இதன் ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டையில், 10 சவீ­தமும், மதிப்பின் அடிப்­ப­டையில், 41 சத­வீ­தமும் அதி­க­ரித்­துள்­ளது.கணக்­கீட்டு காலத்தில், மொத்தம், 6,450 டன் மிளகை ஏற்­று­மதி செய்­ததன் மூலம், 332 கோடி ரூபாய் வருவாய் கிடைத்­துள்­ளது. இது, கடந்­தாண்டில் முறையே, 5,870 டன் மற்றும் 235 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்­தன.
மிளகாய்:இதே போன்று, இஞ்சி ஏற்­று­ம­தியும், அளவின் அடிப்­ப­டையில், 47 சத­வீதம் உயர்ந்து, 4,194 டன்­னி­லி­ருந்து, 6,150 டன்­னா­கவும், மதிப்பின் அடிப்­ப­டையில், 23 சத­வீதம் உயர்ந்து, 53 கோடி­யி­லி­ருந்து, 66 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்­துள்­ளது.மேலும், மிளகாய் ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டையில், 6 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 93,122 டன்­னி­லி­ருந்து, 99 ஆயிரம் டன்­னா­கவும், மதிப்பின் அடிப்­ப­டையில், 10 சத­வீதம் அதி­க­ரித்து, 850 கோடி­யி­லி­ருந்து, 939 கோடி ரூபா­யா­கவும் உயர்ந்­துள்­ளது என, ஜெய­திலக் மேலும் கூறி­யுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)