பதிவு செய்த நாள்
28 செப்2014
23:44
புதுடில்லி:மத்திய அரசின் கடன் இலக்கு, பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும், 8,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என, நிதி செயலர் அரவிந்த் மயராம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, கடன் திரட்டும் இலக்கு, பட்ஜெட் மதிப்பீட்டை விட, 8,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, 5.92 லட்சம் கோடி ரூபாயாக மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறையை, 4.1 சதவீதமாக வைத்திருக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், இரண்டாவது அரையாண்டு காலத்திற்காக, அரசு பத்திரங்கள் வெளியீடு மூலம், 2.4 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்டப்பட உள்ளது.இவ்வாறு மயராம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|