பதிவு செய்த நாள்
28 செப்2014
23:46
தர்மபுரி:மீண்டும் ஏற்பட்டு வரும் மின்வெட்டால், தர்மபுரி மாவட்டத்தில், பட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இழப்பு ஏற்படும் சூழல்:தர்மபுரி மாவட்டத்தில், பட்டுநுால் உற்பத்தி மற்றும் நெசவு தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்மபுரி தொழில் மையம் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பட்டுநுால் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், அன்னசாகரம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பவர்லுாம் மூலம், கைத்தறி துணிகள், நெசவு செய்யப்படுகின்றன.மாவட்டத்தில் ஏற்பட்ட, அறிவிக்கப்பட்டதும் அறிவிக்கப்படாததுமான மின்வெட்டால், பட்டு நுால் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து தொழில்களும், கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால், தீபாவளிக்கு பெற்ற, ஆர்டர்களுக்கு ஏற்ப, பட்டுநுால், கைத்தறி துணிகளை உற்பத்தி செய்து தரமுடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளதுடன் இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.இதுகுறித்து, பட்டு நுால் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:தீபாவளி மற்றும் அதை ஒட்டி வரும் சுபமுகூர்த்தங்களுக்காக, பட்டு நுால் உற்பத்தி செய்து தர ஆர்டர்கள் பெற்றுள்ளோம்.
ஆனால், மாவட்டத்தில், சில தினங்களாக, ஏற்பட்டு வரும், அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, பட்டு நுால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம்:இதனால், பட்டு நுால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன், குறிப்பிட்ட தேதிகளில், பட்டு நுால்களை உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில், பட்டு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களை யும், பாதுகாக்க, தீபாவளி வரை, தடையில்லா மின்சாரம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|