பதிவு செய்த நாள்
01 அக்2014
17:02
மும்பை : முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது. கடந்த இருதினங்களாகவே இந்திய பங்குசந்தைகள் மந்தமான சூழலில் இருந்தது. அது இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின, பின்னர் சற்று நேரத்தில் பங்குசந்தைகள் உயர்ந்தன. ஆனாலும் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் இறுதியில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 62.52 புள்ளிகள் சரிந்து 26,567.99-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 19.25 புள்ளிகள் சரிந்து 7,945.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிந்தும், 9 நிறுவன பங்குகள் உயர்ந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 1.96 சதவீதமும், கெயில் 2.27 சதவீதமும், ஓஎன்ஜிசி., 1.58 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|