பதிவு செய்த நாள்
07 அக்2014
05:09
புதுடில்லி:நடப்பாண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 3.4 சதவீதம் வளர்ச்சி காணும் என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது, அடுத்த ஆண்டில், 6 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில், உருக்கு பயன்பாடு, 1.8 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், உலக உருக்கு கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு, உள்நாட்டு உருக்கு உற்பத்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.இக்கூட்டமைப்பின் மதிப்பீட்டில், நடப்பாண்டில், இந்தியாவில் உருக்கிற்கான தேவை, 3.4 சதவீதம் அதிகரித்து, 7.62 கோடி டன்னாக உயரும்.
இதற்கு, மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, முதலீட்டாளர்களை கவரும் வகையில் எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளே முக்கிய காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், சீனாவில் உருக்கு பயன்பாடு சரிவடைந்து ள்ளதை அடுத்து நடப்பாண்டில், உலகளவில் இதன் பயன்பாடு, 3.8 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலும், இதன் பயன்பாடு, 2 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டு, 159.40 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|