பதிவு செய்த நாள்
07 அக்2014
23:55
புதுடில்லி :சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நோக்கியா ஆலை, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல், மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனம், மொபைல் போன் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மொபைல்போன் தயாரிப்பு ஆலையை, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு, 720 கோடி டாலருக்கு விற்பனை செய்வதாக, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் நோக்கியா நிறுவனம் அறிவித்தது. இதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வரி தொடர்பான சட்டப் பிரச்னைகளால், நோக்கியா ஆலையை, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு முழுமையாக மாற்ற இயலவில்லை.
இந்நிலையில், மைக்ரோ சாப்ட் நிறுவனம், நவம்பர் 1ம் தேதி முதல், நோக்கியா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.இதன் காரணமாக,புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறாத நிலை ஏற்பட்டுள்ளதால், மொபைல் போன் தயாரிப்பை நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|