பதிவு செய்த நாள்
07 அக்2014
23:58
ஊட்டி: காலநிலை மாற்றத்தின் காரணமாக, நீலகிரி தேயிலை வர்த்தகம், 21 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, காலம் தவறிய மழை, மலைப் பிரதேசங்களில் அளவிற்கதிகமான பனிப்பொழிவு, பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, இந்திய தேயிலை சாகுபடியில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட, தென் மாநிலங்களில், பசுந்தேயிலை சாகுபடி குறைந்ததால், கருப்பு தேயிலை துாள் உற்பத்தியும் சரிவடைந்துள்ளது.இதுகுறித்து, சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், வாரந்தோறும், குன்னுார் தேயிலை ஏல மையத்தின் மூலம் விற்கப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு, தேயிலை துாளின் சராசரி விலையில், 19 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி, நடப்பாண்டின் முதல் 9 மாத காலத்தில், 325.93 கோடி ரூபாய் அளவுக்கு, தேயிலை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 411.67 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
எனவே, நடப்பாண்டில், 85.74 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் தேயிலை விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. அதேசமயம், கென்யா, இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில், தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|