ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.128 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.128 உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.40 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.40 ...
முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் தொய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2014
00:02

புதுடில்லி :அரிசி, தேயிலை, முந்திரி, நறுமணப் பொருட்கள், புகையிலை உள்ளிட்ட பல முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், தொய்வை கண்டுள்ளது. இதற்கு, சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்காததே முக்கிய காரணம்.முக்கிய 13 வேளாண் பொருட்களில், 8 வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பின்னடைவை கண்டுள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விலை சரிவு: சப்ளை அதிகரிப்பால், உள்நாட்டை காட்டிலும், சர்வதேச சந்தையில், வேளாண் பொருட்கள் விலை சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக, வர்த்தகர்கள் ஏற்றுமதியை கைவிட்டு, உள்நாட்டு சந்தைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி அஜய் சகாய் தெரிவித்தார்.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், அரிசி ஏற்றுமதி, 3.15 சதவீதம் சரிவடைந்து, 60 கோடி டாலராக குறைந்துள்ளது.
இதே போன்று, நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 2.18 சதவீதம் சரிவடைந்து, 23 கோடி டாலராகவும், புகையிலை ஏற்றுமதி, 14.7 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7.30 கோடி டாலராகவும் குறைந்துள்ளதாக, வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தேயிலை (6.72 சதவீதம்), உணவு தானியங்கள் (50.6 சதவீதம்), முந்திரி (1.82 சதவீதம்) மற்றும் புண்ணாக்கு (64.3 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதியும் பின்னடைவை கண்டுள்ளன.
வர்த்தக பற்றாக்குறை: மேற்கண்ட முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொய்வடைந்துள்ளதையடுத்து, சென்ற ஆகஸ்ட்டில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில், 2.35 சதவீதம் குறைந்து, 2,695 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 1,083 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், வேளாண் பொருட்களின் பங்களிப்பு, 10 சதவீதமாகும்.கடந்த 2010 – 11ம் நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1,735 கோடி டாலராக இருந்தது. இது, 2011 – 12ல், 2,743 கோடி டாலராகவும், 2012–13ல், 3,186 கோடி டாலராகவும், 2013 – 14ல், 4,500 கோடி டாலராகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
பழங்கள்:சென்ற ஆகஸ்டில், மேற்கண்ட முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சரிவை கண்டுள்ள நிலையில், எண்ணெய் வித்துக்கள் (37.2 சதவீதம்), பழங்கள் – காய்கறிகள் (3.46 சதவீதம்), பதப்படுத்தப்பட்ட பொருட்கள் (6.71 சதவீதம்), கடல் உணவுப் பொருட்கள் (35.5 சதவீதம்), இறைச்சி மற்றும் பால் (37.2 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)