பதிவு செய்த நாள்
08 அக்2014
00:03
புதுடில்லி:சென்ற செப்டம்பரில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திர சந்தையில், 23,416 ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, நடப்பாண்டில் இதுவரையிலுமாக, கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீடு, 4.89 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், நிகர அளவில், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 1.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 5.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் அமைந்துள்ள, புதிய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை அடுத்து, கடன்பத்திர சந்தையில் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு முதலீட்டு திட்டங்கள் மூலம், முதலீட்டாளர்களிட மிருந்து நிதி திரட்டி, அதை, பங்குகள், கடன்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|