பதிவு செய்த நாள்
08 அக்2014
00:08
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம், கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவாக, நேற்று பெரும் சரிவை கண்டது.
பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் வெளியாக உள்ளன. இதை கருத்தில் கொண்ட, அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.
இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.11 சதவீதம் மற்றும் 1.17 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், அதிகபட்சமாக உலோக துறை குறியீட்டு எண், 2.65 சதவீதம் சரிவடைந்தது. மேலும், மருந்து, பொறியியல் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டு எண்கள் முறையே, 1.85 சதவீதம் 1.78 சதவீதம் மற்றும் 1.72 சதவீதம் வீழ்ச்சியை கண்டன.
ஜெர்மனியின் தொழில்துறை உற்பத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் பின்னடைவை கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றம் இறக்கமாகவே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 296.02 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 26,271.97 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, சேசா ஸ்டெர்லைட், சிப்லா உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், என்.டி.பி.சி., கெயில், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 93.15 புள்ளிகள் சரிவடைந்து, 7,852.40 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|