பதிவு செய்த நாள்
08 அக்2014
17:47
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததாலும், இந்தியாவின் வளர்ச்சியை ஐஎம்எப் குறைத்ததாலும் சரிவுடன் இருந்த பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 25.18 புள்ளிகள் சரிந்து 26,246.79-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 9.70 புள்ளிகள் சரிந்து 7,842.70-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 11 நிறுவன பங்குகள் சரிந்தும், 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹீரோ மோட்டோ கார்ப், சன்பார்மா, டிசிஎஸ்., விப்ரோ போன்ற நிறுவன பங்குகள் சரிந்தன. அதேசமயம் எண்ணெய் நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|