பதிவு செய்த நாள்
09 அக்2014
01:27
புதுடில்லி :நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜன., – ஆக.,), தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 26,354 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மொத்தம், 21 வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யெஸ் பேங்க், ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு, தொகையை திரட்டி கொண்டுள்ளன.மத்தியில் ஸ்திரமான புதிய அரசு பதவியேற்றதையடுத்து, முதலீட்டாளர் களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பார்வை, பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
எனவே, நடப்பாண்டில், இவ்வகை வெளியீடுகள் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மான தொகை திரட்டப்படும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|