பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்.,பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்., ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிகர நேரடி வரி வசூல் 7 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
01:40

புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,) நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 7.09 சதவீதம் உயர்ந்து, 2,68,836 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2,51,028 கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், மொத்த நேரடி வரி வசூல், 15 சதவீதம் அதிகரித்து, 3,01,063 கோடியிலிருந்து, 3,46,144 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 7,36,221 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் மறு மதிப்பீட்டை காட்டிலும், 15 சதவீதம் அதிகம்.மதிப்பீட்டு காலத்தில், மொத்த நிறுவன வரி வசூல், 15.31 சதவீதம் உயர்ந்து, 1,93,054 கோடியிலிருந்து, 2,22,616 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, தனிநபர் வருமான வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் செல்வ வரி மொத்த வசூல், 14.37 சதவீதம் அதிகரித்து, 1,08,009 கோடியிலிருந்து, 1,23,528 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், முன்கூட்டிய வரி வசூல், 15.28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 7.66 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதே சமயம், ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் வரி வசூல் (டி.டி.எஸ்), 9.47 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 14.22 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)