பதிவு செய்த நாள்
09 அக்2014
01:40
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,) நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 7.09 சதவீதம் உயர்ந்து, 2,68,836 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2,51,028 கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், மொத்த நேரடி வரி வசூல், 15 சதவீதம் அதிகரித்து, 3,01,063 கோடியிலிருந்து, 3,46,144 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 7,36,221 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் மறு மதிப்பீட்டை காட்டிலும், 15 சதவீதம் அதிகம்.மதிப்பீட்டு காலத்தில், மொத்த நிறுவன வரி வசூல், 15.31 சதவீதம் உயர்ந்து, 1,93,054 கோடியிலிருந்து, 2,22,616 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, தனிநபர் வருமான வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் செல்வ வரி மொத்த வசூல், 14.37 சதவீதம் அதிகரித்து, 1,08,009 கோடியிலிருந்து, 1,23,528 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், முன்கூட்டிய வரி வசூல், 15.28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 7.66 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதே சமயம், ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் வரி வசூல் (டி.டி.எஸ்), 9.47 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 14.22 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|