பதிவு செய்த நாள்
10 அக்2014
02:45
மும்பை:மூன்று நாட்கள் சரிவிற்கு பின், பங்குச் சந்தைகள் நேற்று திடீரென எழுச்சி கண்டது.இரண்டாண்டுகளில் காணப்படாத வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவை, பங்கு வர்த்தக எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.சாதகமான நிலவரங்களை அடுத்து, அன்னிய நிறுவனங்கள், பங்குகளில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டன. இதன் காரணமாக, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் ‘சென்செக்ஸ்’, 417 புள்ளிகள் வரையிலும், ‘நிப்டி’, 125 புள்ளிகள் வரையிலும் அதிகரித்தன.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும், தேவை அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகத்தின் இறுதியில், 390.49 புள்ளிகள் அதிகரித்து, 26,637.28 புள்ளிகளில் நிலைகொண்டது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், ஹிண்டால்கோ, எல் அண்டு டி உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், விப்ரோ, மகிந்திரா உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 117.௮௫ புள்ளிகள் உயர்ந்து, 7,960.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|