வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் கடும் சரிவு - சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 அக்2014
10:15
மும்பை : கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த பங்குசந்தைகள் நேற்று எழுச்சி கண்டநிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கியிருக்கிறது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் காரணமாகவும், பங்குசந்தைகளில் நேற்று காணப்பட்ட எழுச்சியை மையமாக வைத்து முதலீட்டாளர்கள் இன்று லாபநோக்கோடு பங்குகளை அதிகளவு விற்பனை செய்து வருவதாலும் இன்றய வர்த்தகம் சரிவுடன் காணப்படுகின்றது. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.90 புள்ளிகள் சரிந்து 26,301.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 106.05 புள்ளிகள் சரிந்து 7,854.50-ஆகவும் இருந்தன.
அதேசமயம் இன்போசிஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் லாபம் 28.6 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்நிறுவன பங்குகள் 5.61 சதவீதம் அளவிற்கு ஏற்றத்துடன் காணப்படுகின்றது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 10,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 10,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 10,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 10,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!