பதிவு செய்த நாள்
10 அக்2014
16:58
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவுடன் துவங்கின. மேலும் முதலீட்டாளர்களும் லாபநோக்கோடு அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. அதேசமயம் இன்போசிஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் லாபம் 28.6 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்நிறுவன பங்குகள் 6.68 சதவீதம் அளவிற்கு ஏற்றத்துடன் முடிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 339.90 புள்ளிகள் சரிந்து 26,297.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 100.60 புள்ளிகள் சரிந்து 7,859.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5.3 சதவீதமும், ஹிண்டால்கோ 4.79 சதவீதமும், ஸ்டெர்லைட் 4.60 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|