தங்கம் விலை சிறிது உயர்ந்ததுதங்கம் விலை சிறிது உயர்ந்தது ... ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு ...
சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:16

புதுடில்லி :சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, பிரதமருக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, எஸ்.இ.ஏ., எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:சமையல் எண்ணெய் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் விலை, வரலாறு காணாத அளவில் சரிவடைந்துள்ளது.தற்போதைய நிலையில், கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி வரியை, 2.5 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்க்கான இறக்குமதி வரியை, 10 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும்.
இதனால், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதோடு, அடுத்த கரீப் பருவத்தில், அவர்கள் அறுவடை செய்யும் பயிர்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மலேசியா, கையிருப்பை குறைக்கும் வகையில், பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இதே போன்று, இந்தோனேஷியாவும், தற்போது, இதன் ஏற்றுமதி வரியை, 9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 0 சதவீதமாக குறைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வ தேச சந்தையில், தாவர எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில், நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 1.15 கோடி டன்னை தாண்ட வாய்ப்புள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)