சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கைசமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை ... ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 340 புள்ளிகள் சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:19

மும்பை,:சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு சந்தைகள் பெரும் சரிவை கண்டன.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தது. இது, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது. இதன் காரணமாக, இன்போசிஸ் இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகள் சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக இருந்தும் பங்கு வர்த்தகம் சோபிக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 28.6 சதவீதம் அதிகரித்து, 3,096 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இதன் ஒட்டுமொத்த வருவாயும், 2.9 சதவீதம் உயர்ந்து, 12,965 கோடியிலிருந்து, 13,342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறை தவிர்த்து, இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.குறிப்பாக, உலோகத் துறை குறியீட்டு எண், 4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, மோட்டார் வாகனம் (–2.56 சதவீதம்), வங்கி (–1.78 சதவீதம்), பொறியியல் (–1.46 சதவீதம்) ஆகிய துறைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 339.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,297.38 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 100.60 புள்ளிகள் சரிவடைந்து, 7,859.95 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)